அம்பாறையில் இலங்கை தமிழரசுக் கட்சி இன்று வேட்புமனுத்தாக்கல்!


( காரைதீவு  நிருபர் சகா)
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று (10) வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர் .

தலைமை வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையிலான பத்து பேர் வேட்புமனுவில் ஒப்பமிட்டனர்.

வேட்புமனுவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன்( அக்கரைப்பற்று ) முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்( காரைதீவு)
குபேந்திரராஜா  ஜெகசுதன்( திருக்கோவில் )
கந்தசாமி இந்துனேஷ்( திருக்கோவில் ) அருள்ஞான மூர்த்தி நிதான்ஞ்சன்( கல்முனை ) பேரின்பநாயகம் ஜீவராஜ்( தம்பிலுவில்)
பாக்கியம் மஞ்சுளா( பெரிய நீலாவணை) ஜெயக்குமார் யசோதரன்( வளத்தாபிட்டி ) கனகரத்தினம் ஜனார்த்தனன்( ஆலையடிவேம்பு )ஆகியோர் ஒப்பிட்டுள்ளனர்.

இன்று பகல்  இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர் பட்டியல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டது.