வி.ரி. சகாதேவராஜா

lகல்முனை கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டால் எழுத்தறிவு தினத்தை விளிப்பூட்டும் செயற்பாடாக விவாத அரங்கு இடம் பெற்றது.

வலயக் கல்விப் பணிப்பாளர் MS சஹுதுல் நஜீம் இன் ஆலோசனைக்கு அமைவாக நடைபெற்றது.

கல்வி முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் UL றியாலின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்விவாத அரங்கில் இவ்வாண்டின் எழுத்தறிவு தின சம்பியன் கிண்ணத்தை கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரியும், இரண்டாம் இடத்தை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியும், மூன்றாம் இடத்தினை கல்முனை மஃமூத் மகளீர் கல்லூரியும் பெற்றுக் கொண்டன.

இப்போட்டியில் பங்குபற்றி கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை,, உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை, அல்- பஃறியா மகா வித்தியாலயம் ஆகியன ஆறுதல் பரிசினைப்பெற்றன.