வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு ஸ்ரீ திரெளபதை அம்மன் ஆலய வருடாந்த மஹா மகோற்சவப் பெருவிழா 01.10.2024 நேற்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.


03.10.2024 மகா பாரத ஏடு திறத்தலும், மகா பாரத பாராயணம் செய்தலும்
07.10.2024 இரவு சுவாமி எழுந்தருளப்பண்ணல்
08.10.2024 அதிகாலை நாட் கால் வெட்டுதல்
12.10.2024  மாலை கல்யாணக்கால் வெட்டுதலும், ஊர்வலமும்
16.10.2024 வனவாசம் செல்லும் நிகழ்வு
17.10.2024 பின்னிரவு தவ நிலை நிகழ்வு
மகாபாரத இதிகாசத்தை அடிப்படையாகக் கொண்டு சடங்குகள் 18 நாட்கள் இடம் பெற்று எதிர் வரும் 18.10.2024 தீ மிதிப்பு நிகழ்வு இடம் பெற்று 19.10.2024 சனிக்கிழமை பாற்பள்ளையத்துடன் நிறைவு பெறும்.

You missed