2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முதல் முடிவுகள் இன்று நள்ளிரவுக்குள் வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அஞ்சல் மூலமான வாக்குகளாகவோ அல்லது பதிவான வாக்குகளின் மூலமாகவோ முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பது வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அதிகாரிகளின் திறமையைப் பொறுத்தே அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.