ரணிலின் வெற்றி உறுதி -மு. இராஜேஸ்வரன்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அவர்கள் வெற்றி பெறுவது உறுதி என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

நாடு இக்கட்டான நிலையில் இருந்தபோது துணிந்து நாட்டை பொறுப்பெடுத்த ஜனாதிபதி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து கல்முனை பிரதேசத்தில் நேற்று 18 ஆம் திகதி பிரசாரம் மேற்கொண்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.