மட்டக்களப்பில் ரணிலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துப்பாகி ரவையுடன் சென்ற இளைஞன் கைது

( கனகராசா சரவணன்;)

மட்டக்ளப்பில்; ஜனாதிபதி ரணில் கலந்துகொண்ட  தேர்தல் பிரச்சார கூட்டத்தில ரி 56 ரக துப்பாகி ரவையுடன் சென்ற இளைஞன் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.

சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் கோரகளிமடு பிரதேசத்தில் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு  வருகை தருபவர்களை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட்டு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

இதன் போது கூட்டத்திற்கு சென்ற இளைஞன் ஒருவரை சோதனையிடும் போது அவரின் உடமையில் இருந்து  ரி 56 ரக துப்பாக்கி ரவை ஒன்றை கண்டுபிடித்து மீட்டதையடுத்து அவரை கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவர் வாகரை வம்மிவெட்டுவான் வீதியைச்சேர்ந்த 24 வயதுடைய கடற்தொழில் ஈடுபட்டுவருபர் என்வும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ச்திவெளி போலிசார் மேற்கொண்டுவருகின்றனர்