சீனு – பெரியநீலாவணை

கொழும்பு பகுதியில் பணியாற்றி வந்த 28 வயதுடைய சத்தியராசா ஹரிஷனன் (மட்டக்களப்பு-ஓந்தாச்சிமடம்) மற்றும் 26 வயதுடைய சிவயோகபதி கௌதமன் (யாழ்பாணம்) ஆகிய இரு இளம் சுகாதாரப்பரிசோதகர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் 25.08.2024 ஞாயிற்றுக்கிழமை (இன்று) நண்ர்களுடன் நீராடச்சென்றபோது கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இருவரதும் பிரேதங்கள் கொழும்பு வைத்தியசாலையில் மேலதிக பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.