மக்கள் அனைத்து வைத்தியர்களையும் நோக்கி கை நீட்ட கூடாது எனவும் அனைவரும் மோசமானவர்கள் இல்லை எனவும் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல்வாதிகள் இறுதியாக மக்களை தோற்கடித்துள்ளார்கள். ஆனால் மக்களுக்கு ஒரு அடிப்படை விழிப்புணர்வை நான் ஏற்படுத்தியுள்ளேன்.

நான் அரசியலுக்கு வரப்போவதில்லை. ஆனால், சாவகச்சேரிக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்க வேண்டும் என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.