திருவண்ணாமலையில் காரைதீவு நடனநர்த்தகி தக்ஷாலினிக்கு ” ஆடல் வல்லான் கலைவளர்மணி விருது”

( வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா)

 இந்தியா திருவண்ணாமலையில் இவ்வாரம் நடைபெற்ற 22வது அனைத்துலக திருமந்திரத்தமிழ் ஆய்வு மாநாடு_ 2025 நிகழ்வில் காரைதீவைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக மாணவி செல்வி ஜெயகோபன் தக்ஷாலினி 

 ” ஆடல் வல்லான் கலைவளர்மணி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அவர் இந்த வாரம் அவரது குழுவினருடன் தமிழ்நாடு சென்றிருந்தார்.

அங்கு திருவண்ணாமலையில் குழு நடனம் இடம்பெற்றது.

திருவையாறு ஔவை  அறக்கட்டளை மூலம் திருமூலர் ஆச்சிரமத்தில் நடாத்திய 22வது அனைத்துலக திருமந்திரத்தமிழ் ஆய்வு மாநாடு_ 2025 நிகழ்வில் கலந்து கொண்டார்.

மேலும் சிதம்பரம் ஆலய சந்நிதானத்தில் நடனம் இடம்பெற்றது.

அங்கும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து சான்றிதழ் வழங்கப்பட்டது.