2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு
109 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
நேற்று மாலை 6.10 மணிக்கு இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான
வாக்கெடுப்பில் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும்,
எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. ஆதரவு.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. எதிர்ப்பு.
இந்த வாக்கெடுப்பில் சுயாதீன உறுப்பினர் இராமனாதன் அர்சுனா, ப.திகாம்பரம், தயாசிறி ஜயசேகர இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 23 பேர் கலந்துகொள்ளவில்லை.