-சகா-

அம்பாறை கொண்டுவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள அவசர திருத்த வேலை காரணமாக இன்று வியாழக்கிழமை (06) காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அக்கரைப்பற்று, இறக்காமம், அட்டாளைச்சேனை, ஒலுவில் பாலமுனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை மற்றும் மருதமுனை போன்ற பிரதேசங்களில் நீர் துண்டிக்கப்படும் என்று நீர்வழங்கல் சபை அறிவித்துள்ளது.

எனவே, நீர்ப்பாவனையாளர்கள் தங்களுக்கு தேவையான நீரை சேமித்து வைத்துக் கொள்வதோடு, அதனை சிக்கனமாக பாவிக்குமாறும் நீர்ப்பாவனையாளர்களை நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்டுள்ளது.